விக்னேஷ்வரனின் வழக்கு அவருக்கு சார்பாக முடிவடைந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விக்னேஷ்வரனின் வழக்கு அவருக்கு சார்பாக முடிவடைந்தது!

வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை, முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் பதவி நீக்கம் செய்த முறை சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் டெனீஸ்வரனை பதவி நீக்கி, புதிய அமைச்சர் நியமிக்கப்பட்ட விதமும் சட்டவிரோதாமானது என அறிவித்துள்ளனர்.

இதற்கமைய இந்த வழக்கிற்கான செலவை மனுதாரரான பா.டெனீஸ்வரனுக்கு செலுத்துமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வட மாகாணத்தின் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தன்னை பதவி நீக்கியமை சட்டத்திற்கு புறம்பானது என உத்தரவிடுமாறு கோரி மேன்முறையீ்ட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதேவேளை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நிறைவேற்ற தவறியதால் நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை செப்டமபர் 10 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கும் தீ்ர்மானிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.