வைத்தியர் ஷாபியிடம் சிசேரியன் செய்ததாக கூறும் தாய்மார்கள் பரிசோதனைக்கு வரவில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியர் ஷாபியிடம் சிசேரியன் செய்ததாக கூறும் தாய்மார்கள் பரிசோதனைக்கு வரவில்லை!

குருணாகல் வைத்தியர் சாபி மீது குற்றம் சுமத்தும் தாய்மார்கள் எவரும் தேவையான பரிசோதனையை செய்து கொள்வதற்கு இதுவரை முன்வரவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

கொழும்பு காசல் வீதி மகளிர் வைத்தியசாலை மற்றும் டி சொய்சா மகளிர் வைத்திசாலைகளில் பரிசோதனைக்கு தயார்படுத்தப்பட்டு இருந்தும் இதுவரை எவரும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த பரிசோதனைக்கு நீண்ட நாட்கள் எடுக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பக்கச்சார்பாக இருப்பதாகவும், அவரின் பரிசோதனைகளில் நியாயம் கிடைக்கும் என்று மக்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.