உயர்தர மற்றும் புலமை பரிசில்கள் பரீட்சைகள் திகதிகள் வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயர்தர மற்றும் புலமை பரிசில்கள் பரீட்சைகள் திகதிகள் வெளியாகின!

இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சைக்காக புதிய கற்கைநெறி சிபாரிசின் கீழ் 198 229 பரீட்சாத்திகளும், பழைய பாடத்திட்டசிபாரிசின் கீழ் 139 475 பரீட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.

அதன்படி பரீட்சைக்கு தோற்றவுள்ள மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 337 704 என்பதுடன், 2678 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன், சிங்கள மொழியில் 255,529 பரிட்சாத்திகளும், தமிழ் மொழியில் 83,840 பரிட்சாத்திகளும் தோற்றவுள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மொத்த பரீட்சாத்திகளின் எண்ணிக்கை 339,369 என்பதுடன், 2,995 மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.