தபால் சேவைகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தபால் சேவைகள் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது!

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பித்த அடையாள வேலைநிறுத்தம் நேற்று இரவு 08.00 மணிக்கு கைவிடப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

தபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்னவுடன் தமது கோரிக்கைகள் சம்பந்தமாக நேற்று மாலை பேச்சுவார்ததை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.

அதற்போது எழுத்து மூலம் வழங்கப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய வேலைநிறுத்தம் கைவிடப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.