விளக்கமறியலில் இருந்து கொண்டே உலகளவில் போதை பொருள் விற்பனை செய்யும் கஞ்சிபான இம்ரான் !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விளக்கமறியலில் இருந்து கொண்டே உலகளவில் போதை பொருள் விற்பனை செய்யும் கஞ்சிபான இம்ரான் !

துபாயில் கைடு செய்யப்பட்டு இலங்கைக்கு அழைக்கப்பட்டு பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் போதை பொருள் கடத்தல் காரரான கஞ்சிபான இம்ரானின் போதை பொருள் கடத்தல் வியாபாரம் தற்பொழுதும் பாகிஸ்தானினூடாக நடைபெற்று வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

விளக்க்மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கஞ்சிபான இம்ரானின் கடத்தல் கும்பல்களுக்கு ஏஜண்ட் மூலமாக தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

துபாயில் தலைமறைவாக இருந்த காலகட்டத்தில் கஞ்சிபான இம்ரான் பாகிஸ்தான் போதைபொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புற்றிருந்தாக கடந்த தினங்களில் தகவல்கள் வெளியாகின.

ஈஸ்டர் தீவிரவாத தாக்குதலை முக்கியத்துவப்படுத்தி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமையால், மாகந்துர மதுஷ் மற்றும் கஞ்சிபான இம்ரான் ஆகியோர் சம்பந்தமான விசாரணைகள் சற்று மந்தமடைந்ததாகவும் தெரிவித்தனர். (இ)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.