காதலியை கடத்தியவர்கள் கைது - சம்பவம் திருகோணமலையில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

காதலியை கடத்தியவர்கள் கைது - சம்பவம் திருகோணமலையில்

திருகோணமலை, மொறவெவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவரை கடத்திச் சென்ற வழக்குடன் தொடர்புடைய இருவர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காததால் 30 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் எம்.எச்எம். ஹம்ஸா நேற்று (18) உத்தரவிட்டுள்ளார்.

மஹதிவுல்வெவ, மொறவெவ பகுதியைச் சேர்ந்த 41 மற்றும் 26 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் காதலித்த பெண் ஒருவரை கடத்திச் சென்றதாக தெரிவித்து சந்தேக நபர்களுக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றில் வழக்கு நடைபெற்று வந்தது.

குறித்த வழக்கின் போது, வழக்குத் தவனைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நிலையிலே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.