கொழும்பு கண்டி வேன் தக்குதல் - முக்கிய புள்ளி உட்பட 8 நபர்கள் விளக்கமறியலில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு கண்டி வேன் தக்குதல் - முக்கிய புள்ளி உட்பட 8 நபர்கள் விளக்கமறியலில்

கொழும்பு - கண்டி வீதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய பிரமுகரான கணித பேராசிரியர் தினேஷ் நுவன் அமரதுங்க இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

இதன்போது குறித்த பேராசிரியர் உட்பட 8 பேரை ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நால்வர் இன்ற அத்தனகல்ல நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து இவ்வாறு 8 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு - கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கடந்த 18ம் திகதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவால் கொழும்பு குற்றப் பிரிவுக்கு உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.