NTJ அமைப்பினொருவரை விடுவிக்க இலஞ்சம் கொடுத்த நபர் பிணையில் விடுதலை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

NTJ அமைப்பினொருவரை விடுவிக்க இலஞ்சம் கொடுத்த நபர் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவரை விடுவிப்பது சம்பந்தமாக இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபரான மொஹமட் சிபான் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

சந்தேகநபரை 15,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 04 இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டார். 

அத்துடன் வழக்கை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ம் திகதி மீண்டும் அழைப்பதற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

கொழும்பு சங்கரீலா ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அப்துல் மஜீட் மொஹமட் நியாஸ் என்பவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிப்பது சம்பந்தமாக இலஞ்சம் வழங்க முயற்சிக்கப்பட்டது. 

ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் ​சேர்ந்த 26 வயதுடைய மொஹமட் சிபான் என்ற நபரே இலஞ்சம் வழங்க முற்பட்டு கைது செய்யப்பட்டதுடன், 05 இலட்சம் ரூபா பணத்தை ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சமாக கொடுக்க முயற்சித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.