
ஓமான் விமான சேவைக்கு சொந்தமான WY 371 என்ற பயணிகள் விமானமே கட்டுநாயக்க பிரதேசத்தில் நிலவுகின்ற கடும் மழை காரணமாக மத்தலை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 08.20 மணியளவில் வருகை தந்துள்ள குறித்த விமானம் வானிலை நிலமை சீரானதையடுத்து மீண்டும் 09.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி புறப்பட்டதாக மத்தலை விமான நிலைய பேச்சாளர் ஒருவர் கூறினார்.