தீவிரவாதி சஹ்ரானின் இந்திய சகாவும் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீவிரவாதி சஹ்ரானின் இந்திய சகாவும் கைது!

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலை நடத்திய தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

32 வயதான முகமது அசாருதீன் என்பவரே இவ்வாறு இந்தியாவில் கோவை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த தாக்குதல் குறித்து இந்தியா விசாரணைகளை முன்னெடுத்திருந்தது. 

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்தியாவின் என்.ஐ.ஏ. அமைப்பின் அதிகாரிகள் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த நிலையில், தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்த இந்தியர்கள் குறித்தும் அறிந்து கொண்டனர். 

குறிப்பாக கோவையில் சிலருடன் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்தது முகப்புத்தக தொடர்புகள் மூலம் அறிந்து கொண்டனர். 

அத்துடன், கோவையில் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் நெருக்கமாக இருப்பவர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் அனுதாபிகளாக இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. 

ஐ.எஸ். தீவிரவாதத்தின் கொள்கைகளை பரப்பும் வகையில் தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் சில தடவை கோவை வந்து சென்றிருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. 

இந்நிலையிலேயே, கோவையில் 7 இடங்களில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 

இதன்போது தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த முகமது அசாருதீன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.