
இலங்கை வளர்ந்து வருவோர் அணி இம்மாத இறுதியில் தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு செல்லவிருக்கும் இலங்கை வளர்ந்து வரும் அணி, தென்னாபிரிக்க வளர்ந்து வரும் அணிக்கு எதிராக 2 நான்கு நாட்கள் போட்டியில் பங்கேற்பதுடன், தென்னாபிரிக்கா வளர்ந்து வரும் அணி மற்றும் தென்னாபிரிக்கா விளையாட்டு பல்கலைக்கழக அணிகளுக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளது.
குறித்த தொடர்களுக்கான இரண்டு குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு குழாம்களினதும் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய அணியின் வீரர்கள் சிலரும் இக்குழாம்களில் இடம்பிடித்துள்ளனர்.
அதன்படி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது விரல் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த லசித் எம்புல்தெனிய, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் குழுாத்தில் இடம்பிடித்திருந்த மொஹமட் சிராஸ் மற்றும் இலங்கை அணிக்காக கடந்த காலங்களில் விளையாடியிருந்த சாமிக்க கருணாரத்ன, கமிந்து மெண்டிஸ், அசித பெர்னாண்டோ, அமில அபோன்சோ, லஹிரு மதுசங்க மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களில் மொஹமட் சிராஸ், அண்மையில் இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சென்று வரலாற்று வெற்றி பெற்ற இலங்கை குழாமில் இணைக்கப்பட்டதன்மூலம் முதல் முறை தேசிய அணிக்கான வரத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்த குழாத்தில் புனித தோமையார் கல்லூரியின் இளம் வேகப் பந்துவீச்சாளர், கலன பெரேரா முதன் முறையாக இலங்கை வளர்ந்து வரும் குழாத்தில் இடம்பிடித்துள்ளார். கலன பெரேரா இதற்கு முன்னர் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள், 19 வயதுக்குட்பட்டோர் தேசிய அணி மற்றும் அயர்லாந்து A அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை பதினொருவர் அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, தற்பொழுது இலங்கை 19 வயதின்கீழ் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்துள்ள இடதுகை வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்கவும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். ஹுங்கம விஜயபா மத்திய கல்லூரி வீரரான இவர் அண்மையில் பாகிஸ்தான் 19 வயதின்கீழ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை (08) வீழ்த்திய வீரராகவும் பதிவானார்.
குறித்த தொடர்களுக்கான இரண்டு குழாம்களை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு குழாம்களினதும் தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், தேசிய அணியின் வீரர்கள் சிலரும் இக்குழாம்களில் இடம்பிடித்துள்ளனர்.
அதன்படி, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது விரல் உபாதைக்கு முகங்கொடுத்திருந்த லசித் எம்புல்தெனிய, தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் குழுாத்தில் இடம்பிடித்திருந்த மொஹமட் சிராஸ் மற்றும் இலங்கை அணிக்காக கடந்த காலங்களில் விளையாடியிருந்த சாமிக்க கருணாரத்ன, கமிந்து மெண்டிஸ், அசித பெர்னாண்டோ, அமில அபோன்சோ, லஹிரு மதுசங்க மற்றும் சந்துன் வீரக்கொடி ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இவர்களில் மொஹமட் சிராஸ், அண்மையில் இலங்கை அணி தென்னாபிரிக்காவுக்கு சென்று வரலாற்று வெற்றி பெற்ற இலங்கை குழாமில் இணைக்கப்பட்டதன்மூலம் முதல் முறை தேசிய அணிக்கான வரத்தைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இந்த குழாத்தில் புனித தோமையார் கல்லூரியின் இளம் வேகப் பந்துவீச்சாளர், கலன பெரேரா முதன் முறையாக இலங்கை வளர்ந்து வரும் குழாத்தில் இடம்பிடித்துள்ளார். கலன பெரேரா இதற்கு முன்னர் பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகள், 19 வயதுக்குட்பட்டோர் தேசிய அணி மற்றும் அயர்லாந்து A அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை பதினொருவர் அணிக்காக விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று, தற்பொழுது இலங்கை 19 வயதின்கீழ் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்துள்ள இடதுகை வேகப் பந்துவீச்சாளர் டில்ஷான் மதுசங்கவும் இந்த குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். ஹுங்கம விஜயபா மத்திய கல்லூரி வீரரான இவர் அண்மையில் பாகிஸ்தான் 19 வயதின்கீழ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகளை (08) வீழ்த்திய வீரராகவும் பதிவானார்.
-ThePapare