ஷஹீத் எம் ரிஸ்மி உள்ளூர் ஆளுகை நிறுவன பணிப்பாளர் இராஜினாமா!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஷஹீத் எம் ரிஸ்மி உள்ளூர் ஆளுகை நிறுவன பணிப்பாளர் இராஜினாமா!!!

இலங்கையிலுள்ள ஏனைய அரச நிறுவனங்களை விட மாகாண சபை உள்ளுராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட நிறுவனங்கள் தான் கணிசமாளவு சேவைகளை மக்களுடன் நெருங்கி செய்து வருவதாக என்று இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷஹீத் எம் ரிஸ்மி தெரிவித்தார்.

இலங்கை உள்ளுர் ஆளுகை நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக இதுவரையலும் கடமையாற்றிய ஷஹீத். எம். ரிஸ்மி தமது பதவியை இன்று இராஜினாமாச் செய்த பின்னர் அலுவலக உத்தியோகஸ்தர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிரியா விடை வைபவத்தில் கலந்துகொண்ட அகில இலங்கை வை எம். எம். ஏ. சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ஷஹீத் எம் ரிஸ்மி இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில், இங்கு பல பிரிவுகளாக இருந்த குழுக்களை ஒருமுகப்படுத்தி எனக்கு வேலை செய்ய தேவை இருந்தது. இங்குள்ள ஊழியர் அனைவரும் தனித்தனியாக சகோதர வாஞ்சையுடன் பழகி அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த கடமைகளை நிறைவேற்றி வந்தோம். இந்த அலுவலகத்தில் கடமை புரியும் அதிகாரிகள் அனைவரும் வெளிப்படையாகவே இயங்கி வருகின்றனர். இதில் ஒவ்வொருவரும் திறன் வாய்ந்தவர்கள் உள்ளனர். தத்தமது செயற் திறன் மூலமாக எதிர்காலத்தில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிவகைகளை செய்து வைத்துள்ளோம்.

இந்த நிறுவகத்தின் எதிர்பார்ப்பு என்ன? இதன் மூலம் எதனை வழங்க முடியும். இதன் மூலம் ஒரு நபர் பயன் அடைய இருப்பாராயின் அவர்களைச் சந்தோசப்படுத்த வேண்டும். அந்த வகையில் இவர்களுடைய ஊழியர் சேம இலாப நிதி 15 விகிதமாக இருந்தது. அவற்றை 25 விகிதமாக உயர்த்த முடிந்தது. அதன் பின்னர் அவர்களுடைய எதிர்பார்ப்புக்கு இணங்க அமைய ஆயுட் கால காப்புறுதித் திட்டம் ஒன்றை உருவாக்க முடிந்தது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.