
அதன்படி இன்று (12) மாலை 4 மணி வரை முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக, பொலிஸ் தலைமையகத்தில் விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் குறித்த குழுவுக்கு நேற்று வரை 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று காலை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.