இன்று மாலையுடன் முறைப்பாடுகள் சேகரிப்பு முடிவுக்கு வரவுள்ளது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று மாலையுடன் முறைப்பாடுகள் சேகரிப்பு முடிவுக்கு வரவுள்ளது!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும்.

அதன்படி இன்று (12) மாலை 4 மணி வரை முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்வதற்காக, பொலிஸ் தலைமையகத்தில் விஷேட பொலிஸ் குழு ஒன்று நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் ​குறித்த குழுவுக்கு நேற்று வரை 11 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்று காலை முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.