திருமணத்துக்கு மறுத்த 28 பெண்ணைக் கொலை செய்த 65 வயதான நபர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திருமணத்துக்கு மறுத்த 28 பெண்ணைக் கொலை செய்த 65 வயதான நபர்!

பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று (10) சூரியவெவ, பெத்தேவௌ பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரு பிள்ளைகளின் தாயான 28 வயது பெண்ணே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த அப் பெண்ணிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐந்து பிள்ளைகளின் தந்தையான 65 வயதான நபர் அடிக்கடி தொல்லை செய்துவந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த அப்பெண் வீட்டில் தனிமையில் இருந்தபோது, அவரது வீட்டுக்குவந்த சந்தேக நபர் வழமைபோல திருமணத்துக்கு வற்புறுத்தியுள்ள நிலையில் இதனால் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து அப்பெண் சந்தேகநபரை தாக்கி அவரை அங்கிருந்து விரட்டியுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த அப்பெண் நேற்று (10) மாலை தனது தாயின் வீட்டிலிருந்து, தனது கணவர் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி சந்தேக நபர் அவரை கூரிய ஆயதத்தால் தாக்கி அகாலை செய்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.