
குறித்த அப் பெண்ணிடம், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐந்து பிள்ளைகளின் தந்தையான 65 வயதான நபர் அடிக்கடி தொல்லை செய்துவந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த அப்பெண் வீட்டில் தனிமையில் இருந்தபோது, அவரது வீட்டுக்குவந்த சந்தேக நபர் வழமைபோல திருமணத்துக்கு வற்புறுத்தியுள்ள நிலையில் இதனால் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து அப்பெண் சந்தேகநபரை தாக்கி அவரை அங்கிருந்து விரட்டியுள்ளார் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், குறித்த அப்பெண் நேற்று (10) மாலை தனது தாயின் வீட்டிலிருந்து, தனது கணவர் வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மேற்படி சந்தேக நபர் அவரை கூரிய ஆயதத்தால் தாக்கி அகாலை செய்துள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.