ஹெட்டனில் கோர விபத்து - இளைஞன் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹெட்டனில் கோர விபத்து - இளைஞன் பலி!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேன பதுபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்ததாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து (15) சனிக்கிழமை காலை 09.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. 

அம்பகமுவ உடபுலத்கம பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்துன் மதுரங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். 

கொழும்பில் இருந்து ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டியும், கினிகத்தேன பகுதியில் இருந்து ரஞ்சிராவ பகுதிக்கு சென்ற ஊந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் படுகாயமடைந்து நாவலபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் உயிரிழந்தள்ளதாக தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யபட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.