
நாவலபிட்டி கடுலஞ்சேன தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெள்ளிகிழமை (14) இடம்பெற்றது.
இதன்போது கும்பாபிஷேகத்திற்கான விஷேட பூஜைகள் இடம்பெற்று கொண்டிருந்த வேளை பெண் ஒருவரின் தங்கசங்கிலியை அருத்த சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஆறு பெண்கள் நாவலபிட்டி பொலிஸாரினால் கைது செய்யபட்டுள்ளனர்.
ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்று கொண்டிருந்த வேலை ஆலயத்தில் உட்புகுந்த ஆறு சந்தேகத்திற்கு இடமான பெண்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதை போல் இருந்த வேளை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்னொருவருடைய தங்கமாலையை அறுத்தையடுத்து குறித்த பெண் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து ஆலயத்தினுள் வந்த பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதோடு தங்மாலையையும் மீட்டுள்ளனர்.
இதன்பின்னர் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 06 பெண்கள் கைது செய்யபட்டுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த ஆறு பெண்களும் ஆலயங்களில் இடம்பெறுகின்ற விஷேட பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகங்கள் இடம்பெறும் பிரதேசங்களுக்கு குழுவாக சென்று பக்த அடியார்களின் தங்கமாலைகளை களவாடும் தொழிலை நீண்டகாலமாக செய்து வந்துள்ளனர்.
குறித்த இந்த ஆறு பெண்களும் வாழைச்சேனை, புத்தளம், ஆலாவத்த வத்தேகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை நாவலபிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



