யாழ் நகரை ஆண்டிய தீவில் வெடிபொருட்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ் நகரை ஆண்டிய தீவில் வெடிபொருட்கள்!

யாழ்.நகரை அண்டிய சிறுத்தீவு பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு அபாயகரமான வெடிபொருட்களை படையினர் மற்றும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனுள் டெட்டனேட்டர்கள், சீ-4 வெடி மருந்து, மற்றும் பல வெடிமருந்துகள், பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.