
நேற்றுப் பிற்பகல் இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது மிக அபாயகரமான பெருந்தொகை வெடிபொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனுள் டெட்டனேட்டர்கள், சீ-4 வெடி மருந்து, மற்றும் பல வெடிமருந்துகள், பாதுகாப்பாக பொதி செய்யப்பட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருக்கின்றன.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


