சம்மாந்துறையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சம்மாந்துறையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி ஒருவர் பலி!

சம்மாந்துறை - கந்தசாமி கோயில் வீதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.

29 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

அவர் மற்றும் அவருடன் வருகை தந்த இரு பெண்கள் மற்றும் ஆண் ஒருவருக்குமே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டதாகவும், படுகாயமடைந்த இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கூரிய ஆயுதங்களுடன் இரு நபர்களும், இரு பெண்களுமாக நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.