இலங்கை தற்கொலை தாக்குதலுடன் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நேரடி தொடர்பில்லை?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை தற்கொலை தாக்குதலுடன் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு நேரடி தொடர்பில்லை?

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டு தாக்குதலுடன் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு நேரடியாக தொடர்புப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது,

“இந்த தாக்குதலை உள்ளூர் குழுவினரே நன்கு திட்டமிட்டு மேற்கொண்டுள்ளனர் என்பதனை விசாரணை அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இந்த தாக்குதல் குறித்த காணொளி இந்தோனேசியா வழியாகவே ஐ.எஸ் அமைப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதனையே அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர். பின்னர், ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அல்- பக்தாதி, இலங்கை தொடர் தற்கொலை குண்டுதாக்குதலுக்கு உரிமை கோரியிருந்தார்.

இந்த தாக்குதலை நடத்தியவர்கள் அல்-பக்தாதியின் தலைமையில் செயற்படவில்லை. எனினும் ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருடன் அவர்கள் சில வழிகளில் தொடர்பு கொண்டிருக்கலாம்.

இந்நிலையிலேயே, இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலை நடத்தியவர்கள் தூய ஐ.எஸ் தீவிரவாதிகள் கிடையாது” என அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

#தமிழ்வின்

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.