
நேற்று இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததனை தொடர்ந்து , வீட்டில் விளக்கு ஏற்றியுள்ள நிலையில், விளக்கு கவிழ்ந்து தீப்பற்றியதில் குறித்த பெண் உயரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
74 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், குறித்த பெண் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. வீட்டில் தனிமையாக இருந்துள்ள நிலையிலே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக சுடிக்காட்டப்பட்டுள்ளது.