
இந்த வைரஸ் காரணமாக , முதல்நாள் காய்ச்சல் காணப்படுவதுடன் , பின்னர் சிறார்களின் உடலில் நீர்த்தன்மையான கொப்புளங்கள் மற்றும் சிவப்பு நிறத்திலான தழும்புகளும் ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
வாய், கை மற்றும் கால்களில் இந்த நோய் பரவுகிறது.
இவை 3 நாட்கள் வரையில் காணப்படும். எனினும் சிலருக்கு அதன் பின்னரும் இந்த கொப்புளங்கள் நீடிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், அவ்வாறு நீடிக்கும் பட்சத்தில் விட்டமின்கள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அச்சமடைய வேண்டியதில்லை என்றும் ஆனாலும் இந்த நோய் விரைவாக பரவும் என்பதால், இந்த நோய் ஏற்பட்டுள்ள சிறார்களை பாடசாலைகள் அல்லது முன்பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.