பேச்சுவார்த்தைகள் பலனளிக்காவிடின் நாம் யார் என்று காட்டுவோம் - புகையிரத திணைக்கள ஊழியர்கள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பேச்சுவார்த்தைகள் பலனளிக்காவிடின் நாம் யார் என்று காட்டுவோம் - புகையிரத திணைக்கள ஊழியர்கள்

நள்ளிரவில் இருந்து முன்னெடுக்கப்படவிருந்த புகையிரத திணைக்கள ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. 

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவில் இருந்து புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளதாக புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

புகையிரத சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சில இரண்டு நாள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு ஏற்கனவே தீர்மானித்திருந்தன. 

தொழிற்சங்கங்களின் கோரிக்கை தொடர்பில் நிதியமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார். 

இதேவேளை, தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிடத்து மீண்டும் பணிப் பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரத சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட தெரிவித்தார். 

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.