வீதி விபத்தில் ஒருவர் பலி !!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீதி விபத்தில் ஒருவர் பலி !!!

சூரியவெவ - அம்பாந்தோட்டை 100 அடி வீதியில் பயணித்த டிப்பர் வண்டி, சைக்கிள் ஒன்றுடன் மோதி ஒருவர் பலியாகியுள்ளார்.

டிப்பர் வண்டி சாரதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விடத்திலேயே பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பட்டம் நடாத்தியதாக தகவல் அறியக் கிடைத்தது.

நேற்று (01) மாலை சூரியவெவ நமடகஸ்வெவ பிரதேசத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் சைக்கிளில் பயணித்த 70 வயதுடையவாராவர்.

மேற்படி டிப்பர் வண்டி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கட்டுமான பணிக்காக சீன நிறுவனமொன்றிற்கு வாடகைக்கு எடுக்கபப்ட்ட வண்டி என விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.

மேலும் விபத்துக்குள்ளாகிய சந்தர்ப்பத்தில் டிப்பர் வண்டி சாரதி கையடக்க தொலைபேசி பாவனையில் இருந்ததாக குற்றஞ்சாட்டி, உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தக் கோரி பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.

சூரியவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்படி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.