
டிப்பர் வண்டி சாரதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்விடத்திலேயே பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பட்டம் நடாத்தியதாக தகவல் அறியக் கிடைத்தது.
நேற்று (01) மாலை சூரியவெவ நமடகஸ்வெவ பிரதேசத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ள நபர் சைக்கிளில் பயணித்த 70 வயதுடையவாராவர்.
மேற்படி டிப்பர் வண்டி தெற்கு அதிவேக நெடுஞ்சாலை கட்டுமான பணிக்காக சீன நிறுவனமொன்றிற்கு வாடகைக்கு எடுக்கபப்ட்ட வண்டி என விசாரணைகளிலிருந்து தெரிய வந்தது.
மேலும் விபத்துக்குள்ளாகிய சந்தர்ப்பத்தில் டிப்பர் வண்டி சாரதி கையடக்க தொலைபேசி பாவனையில் இருந்ததாக குற்றஞ்சாட்டி, உடனடியாக சட்டத்தினை அமுல்படுத்தக் கோரி பிரதேசவாசிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.
சூரியவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்படி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.