
நேற்று (01) இந்த அதிரடி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது பெண்கள் உட்பட ஆண்கள் 30 நபர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு இவர்கள் 25-70 வயதுடையவர்கள் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 03 மோட்டார் சைக்கிள்கள், மோட்டார் வாகனமொன்று, மற்றும் 03 கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த பரிசோதனைகளுக்காக கல்பிட்டி விஜய கடற்படையினரின் உதவிகள் கிடைக்கப்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்பிட்டி பொலிசார் தெரிவித்தனர்.