
இந்நிலையில், குற்றவியல் புலனாய்வு திணைக்களம் தீவிரவாத குழுக்களின் சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ) உள்ளிட்ட இரண்டு அமைப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை செய்திருந்தார்.
2019ம் ஆண்டின் 01ம் இலக்க அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் உள்ள அனைத்து குழுக்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் சொத்துகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ) உள்ளிட்ட இரண்டு அமைப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை செய்திருந்தார்.
2019ம் ஆண்டின் 01ம் இலக்க அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் உள்ள அனைத்து குழுக்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் சொத்துகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.