தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அமைப்புகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீவிரவாத தாக்குதல்களை நடத்திய அமைப்புகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை!!

தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் உள்ள அனைத்து குழுக்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றவியல் புலனாய்வு திணைக்களம் தீவிரவாத குழுக்களின் சொத்துக்களை அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் தற்கொலை குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேசிய தௌஹீத் ஜமாத் (NTJ) உள்ளிட்ட இரண்டு அமைப்புகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை செய்திருந்தார்.

2019ம் ஆண்டின் 01ம் இலக்க அவசரகாலச் சட்டத்தின் கீழ் இலங்கையின் ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு பின்னால் உள்ள அனைத்து குழுக்களின் சொத்துகளையும் பறிமுதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதனடிப்படையில் சொத்துகளை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.