உலகில் அட்டூழியம் புரியும் அதிகார வர்க்கத்தினரை பல வருடங்களாக நடு நடுங்க வைத்த "WikiLeaks" இன் இணை நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவினால் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல ஆவணங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளானார். (வீடியோ இணைப்பு)
இதன் பின்னர் 2010ம் ஆண்டு சுவீடனில் பாலியல் குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது அவர் மீது சுமத்தப்பட்ட வீண்பழி என அவர் மறுத்திருந்தார்.
அச்சுறுத்தல் காரணமாக தொடர் பயணங்களிலேயே இருந்து வந்த அவர், ஒபாமா முதல் கிலாரி வரையான அனைத்து தலைவர்களது ஆவணங்களையும் வெளியிட்டு அமெரிக்க தேர்தலில் ஹிலாரி கிளின்டனை தோற்கடிக்கவும் காரணமாக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் குற்றத்திற்காக சுவீடன் அரசினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் எக்குவடோர் அகதி அந்தஸ்து இருந்தமையால் லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் 2012 ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார்.
இதன் பின்னர் லண்டனில் அரசியல் அகதி அந்தஸ்து கேட்டிருந்தார். ஆனாலும் அது நிராகரிக்கப்பட்டு லண்டன் பொலிஸாரால் ஏழு வருடங்களின் பின்னர் கடந்த 11 ஆம் திகதி தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான ஜுலியன் அசாஞ்ஜ் அண்மை காலமாக உடல்நலக்குறைவினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது இணையத்தள கணக்குகள் சுவிஸ் வங்கி கணக்குகள் அனைத்தும் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையிலேயே அவரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவில் அவர் மரணதண்டனையை எதிர்நோக்கும் அச்சுறுத்தல் காணப்பட்டால் நாடுகடத்த மாட்டோம் என பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவினால் ஆப்கானிஸ்தான், ஈராக் மற்றும் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போர் போன்ற நாடுகளில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான பல ஆவணங்களை தனது இணையத்தளத்தில் வெளியிட்டு அமெரிக்காவின் கோபத்திற்கு ஆளானார். (வீடியோ இணைப்பு)
இதன் பின்னர் 2010ம் ஆண்டு சுவீடனில் பாலியல் குற்றத்திற்காக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது அவர் மீது சுமத்தப்பட்ட வீண்பழி என அவர் மறுத்திருந்தார்.
அச்சுறுத்தல் காரணமாக தொடர் பயணங்களிலேயே இருந்து வந்த அவர், ஒபாமா முதல் கிலாரி வரையான அனைத்து தலைவர்களது ஆவணங்களையும் வெளியிட்டு அமெரிக்க தேர்தலில் ஹிலாரி கிளின்டனை தோற்கடிக்கவும் காரணமாக இருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.
பாலியல் குற்றத்திற்காக சுவீடன் அரசினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் எக்குவடோர் அகதி அந்தஸ்து இருந்தமையால் லண்டனில் உள்ள எக்குவடோர் தூதரகத்தில் 2012 ஆம் ஆண்டு தஞ்சமடைந்தார்.
இதன் பின்னர் லண்டனில் அரசியல் அகதி அந்தஸ்து கேட்டிருந்தார். ஆனாலும் அது நிராகரிக்கப்பட்டு லண்டன் பொலிஸாரால் ஏழு வருடங்களின் பின்னர் கடந்த 11 ஆம் திகதி தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
47 வயதான ஜுலியன் அசாஞ்ஜ் அண்மை காலமாக உடல்நலக்குறைவினாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இவரது இணையத்தள கணக்குகள் சுவிஸ் வங்கி கணக்குகள் அனைத்தும் ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையிலேயே அவரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவில் அவர் மரணதண்டனையை எதிர்நோக்கும் அச்சுறுத்தல் காணப்பட்டால் நாடுகடத்த மாட்டோம் என பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.