வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்புடைய குழு கைது!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாள் வெட்டு சம்பவங்களில் தொடர்புடைய குழு கைது!!!


பல்­வேறு வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் தொடர்­பாக நேற்று அதி­காலை மானிப்­பா­யில் 8 பேர் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். 3 வாள்­கள், இரு உந்துருளி­கள், சுழி­யோ­டி­கள் பயன்­ப­டுத்­தும் முகக் கண்­ணா­டி­கள் என்ப­வை­யும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளதாக பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அண்­மைய காலங்களில் மானிப்­பா­யில் வாள்­வெட்­டுச் சம்ப­வங்­கள் அதி­க­ரித்­தி­ருந்­தன. அதனைய­டுத்து வடக்கு மாகாண மூத்­தப் பிர­திப் பொலிஸ் மா அதி­பர் ரொசான் பெர்­ணான்டோ சிறப்­புக் கவ­னம் எடுத்­தி­ருந்­தார். குற்­றச் செயல்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­க­ளைக் கைது செய்­வ­தற்­கான சிறப்பு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ளப்­பட்­டி­ருந்­தன.

புத்­தாண்டு விடு­மு­றை­க­ளை­யும் தவிர்த்­துப் பொலி­ஸார் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யின் தொடர்ச்­சி­யாக சந்தேக ந­பர்­கள் நேற்று கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளின் கையடக்க தொலைபேசிக­ளில் இருந்து ஏரா­ள­மான ஒளிப்­ப­டங்­கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. வாள்­க­ளு­டன் பல பேரின் ஒளிப்ப­டங்­க­ளும், பெயர்­கள் பொறிக்­கப்­பட்ட வாள்­க­ளின் ஒளிப்­ப­டங்­க­ளும் கிடைத்துள்­ளன என்று தெரி­வித்­துள்ள பொலி­ஸார் அவற்­றின் அடிப்­ப­டை­யி­லும் தற்­போது விசா­ர­ணை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளுக்­கும், தற்­போது வாள் வெட்டுக் குற்­றச்­சாட்­டில் சிறை­யில் உள்ள விக்­ரர் என்ற நப­ருக்­கும், வேறு குழுக்­க­ளுக்­கும் இடையே தொடர்புகள் உள்­ளமை விசா­ர­ணை­க­ளில் தெரியவந்துள்ளது.

விக்­ரர் என்ற நப­ரின் பெயர் பொறிக்­கப்­பட்ட வாள்­க­ளின் ஒளிப்­ப­டங்­க­ளும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளதாக தெரிவித்த பொலி­ஸார், ஒளிப்­ப­டங்­களை ஆதா­ர­மா­கக் கொண்டு இன்­னும் பலர் தேடப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்­தக் குழு­வின் பிர­தான நபர் என்று கரு­தப்­ப­டும் கைத­டி­யைச் சேர்ந்த ஒரு­வ­ரும் தேடப்­பட்டு வருகின்றார். இவர்­கள் விரை­வில் கைது செய்­யப்­ப­டு­வார்­ எனவும் பொலிஸார் குறிப்­பிட்­ட­னர்.

வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொசான் பெர்­ணான்டோ நேற்று மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்திற்கு நேரில் சென்று விசா­ர­ணை­க­ளை கண்­கா­ணித்­தார். பொலி­ஸார் எடுக்க வேண்­டிய மேல­திக நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக ஆலோ­ச­னை­களை வழங்­கி­னார். ஒளிப்படங்­கள் மூலம் அடை­யா­ளம் காணப்­பட்­டுள்ள சந்தே­க­ந­பர்­களை உட­ன­டி­யா­கக் கைது செய்­வ­தற்­கான பணிப்­பு­ரை­க­ளை­யும் பொலி­ஸா­ருக்கு வழங்­கி­யுள்­ளார்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களை சட்ட நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் முன்னெடுக்கப்படு­கின்­றன எனவும் மானிப்பாய் பொலிஸார் தெரி­வித்­த­னர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.