
யாழில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் நடந்த தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் தாம் இவ்வாறு பெரும் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள்.
ஆனால் இவ்வாறு கோரத் தாக்குதல்களை மேற்கொள்ளும் அளவுக்கு வளரவிட்டதற்கு யார் காரணம்? இது ஒரு தேவைக்காக வளரவிடப்பட்டதா?
ஏனேன்றால் இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச ரீதியில் பல்வேறு அழுத்தங்கள் இருக்கின்றன. எனவே சிலசமயங்களில் அதிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக இதனை வளர விட்டார்களா?
இந்த நிலையில், முப்படையினரும், பொலிஸாரும், அரசியல் தலைவர்களும் பார்வையாளர்களாக இருந்தார்களா? இதனை நம்ப முடியவில்லை.
இதனைவிட முக்கியமாக தலைகுனிவான விடயம் தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரியாது என்பதுதான்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
#athavannews