தீவிரவாதி சஹ்ரானின் சாரதி கைது - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தீவிரவாதி சஹ்ரானின் சாரதி கைது - பொலிஸ் ஊடகப்பேச்சாளர்

தீவிரவாதி சஹ்ரானின் சாரதியான கபூர் என அழைக்கப்படும் மொஹம்மத் ஷரீப் இன்று மாலை காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சாரதி கபூரை மேலதிக விசாரிகளுக்காக குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறிப்பிட்ட சந்தேக நபர் கொழும்பிலிருந்து காத்தான்குடி செல்லும் வழியில் பஸ்ஸில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தாக்குதல்களை மேட்கொள்ளவதற்கான திட்டங்கள் போடப்பட்ட நான்கு வீடுகளை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறிப்பிட்ட வீடுகள் சம்மாந்துறை, சாய்ந்தமருது மற்றும் நிந்தவூரில் அமைந்திருப்பதாக தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.