நேற்று சாய்ந்தமருதில் நடந்தது என்ன? - முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று சாய்ந்தமருதில் நடந்தது என்ன? - முழு விபரம்!

கல்முனை - சாய்ந்தமருது பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் பலியாகினர்.

பலியானவர்களில் 6 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் மீட்கப்பட்டனர் என போலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
மேலும் காயமடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் போது, குறிப்பிட்ட சில தீவிரவாத குழுவினரால் பொலிஸார் மீது துப்பாக்கிப்பிரயோகம் மற்றும் 3 குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பின்னர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.

சம்பவத்தில் பொலிஸாருக்கோ அல்லது இராணுவத்தினருக்கோ எவ்வித பாதிப்பும் ஏட்படவில்லை. 11 பேர் இறந்த செய்தி வதந்தியே.

பின்னர் சோதனையின் போது பாரிய அளவு வெடிப்பொருட்கள் தயாரிக்கும் மூலப்பொருட்கள், மடிக்கணனி, ISIS கொடி, அவர்கள் பயன்படுத்திய உடுப்புகள் மற்றும் பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் தாக்குதளுக்கு போது பயன்படுத்திய தீவிரவாதி சஹ்ரானின் சகோதரனின் பேரில் கொள்வனவு செய்யப்பட்ட புதிய வேன் ஒன்றும் நிந்தவூர் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.