
இந்த பதாகைகள் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த வேலையில் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த பதாகைகளுடன் கஞ்சாவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரபு மொழியில் எழுதப்பட்ட பதாகைகள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அம்பாரை - இலக்கம் 1 மாவத்தையில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியினூடாக நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை பலருக்கு அனுப்பியதன் தொடர்பாகவே கைது செய்யப்பட்டுள்ளார்.