அரபு மொழியில் எழுதப்பட்ட ஏராளமான பதாகைகளுடன் இருவர் கைது

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரபு மொழியில் எழுதப்பட்ட ஏராளமான பதாகைகளுடன் இருவர் கைது

அரபு மொழியில் எழுதப்பட்ட 500 இற்கும் மேற்பட்ட பதாகைகள் (பேனர்கள்) உடன் இரு சந்தேக நபர்கள் கல்பிட்டிய - புதுகுடியிருப்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பதாகைகள் வீடொன்றில் மறைத்து வைத்திருந்த வேலையில் கடற்படையினரால் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அந்த பதாகைகளுடன் கஞ்சாவும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரபு மொழியில் எழுதப்பட்ட பதாகைகள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அம்பாரை - இலக்கம் 1 மாவத்தையில் நடாத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியினூடாக நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பான புகைப்படங்களை பலருக்கு அனுப்பியதன் தொடர்பாகவே கைது செய்யப்பட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.