
கடந்த மாதம் 24 ஆம் திகதி நீர்கொழும்பு நகரில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றில் இரத்தினக்கல் மற்றும் அதன் உரிமையாளரினை கடத்தி சென்றது இரத்தினக்கல்லினை கொள்வனவு செய்வதாக கூறிய சந்தர்ப்பத்திலே ஆகும்.
மேலும் கடத்தல்காரர்களினால் இரத்தினக்கல் உரிமையாளரிடம் இருந்த ரூ. 50000 பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பிரகாரம் சந்தேக நபர்கள் ஹோமாகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் வைக்கால், ஹோமாகம, பங்கதெனிய மற்றும் வடுமுன்னேகெதர ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 32,34,39 மற்றும் 49 வயதுடையவர்களாகும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.