இரண்டரை கோடி இரத்தினக்கல் கொள்ளை தொடர்பில் நால்வர் கைது!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டரை கோடி இரத்தினக்கல் கொள்ளை தொடர்பில் நால்வர் கைது!!!

நீர்கொழும்பு பிரதேசத்தில் கொள்ளையிடப்பட்ட இரண்டரை கோடி பெறுமதியுள்ள இரத்தினக்கல்லுடன் சந்தேக நபர்கள் நால்வர் ஹோமாகம பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் 24 ஆம் திகதி நீர்கொழும்பு நகரில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றில் இரத்தினக்கல் மற்றும் அதன் உரிமையாளரினை கடத்தி சென்றது இரத்தினக்கல்லினை கொள்வனவு செய்வதாக கூறிய சந்தர்ப்பத்திலே ஆகும்.

மேலும் கடத்தல்காரர்களினால் இரத்தினக்கல் உரிமையாளரிடம் இருந்த ரூ. 50000 பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக மேல் மாகாண வடக்கு குற்றவியல் பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பிரகாரம் சந்தேக நபர்கள் ஹோமாகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வைக்கால், ஹோமாகம, பங்கதெனிய மற்றும் வடுமுன்னேகெதர ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 32,34,39 மற்றும் 49 வயதுடையவர்களாகும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.