மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினை இன்று முதல் பார்வையிடும் சந்தர்ப்பம்!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினை இன்று முதல் பார்வையிடும் சந்தர்ப்பம்!!!

மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினை மக்கள் பார்வையிடுவதற்காக இன்றிலிருந்து (25)

மீண்டும் சந்தர்ப்பம் வழங்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் ஆணைக்கிணங்க இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக மொரகஹகந்த திட்டத்தின் மக்கள் பிரதிநிதி பீ. ஜீ. தயானந்த அவர்கள் தெரிவித்தார்கள். .

நடைபெற்றிருந்த பாதுகாப்பற்ற சூழ் நிலை காரணமாக மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினை பார்வையிடும் சந்தர்ப்பம் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

நீர்த்தேக்கத்தினை பார்வையிட வருபவர்கள் விசேட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டும், வாகனங்கள் நீர்த்தேக்க வலாகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்ட வேண்டும் எனவும் பீ. ஜி. தயானந்த அவர்கள் தெரிவித்தார்கள்.

எவ்வாறாயினும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தினை பார்வையிட வரும் அனைவரும் மக்கள் பிரதி காரியாலத்திற்கு சென்று அங்கு காண்பிக்கப்படும் காணொளியினை பார்த்து, விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களுடன் நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கான அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக் கொள்வது அவசியமானதாகும்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.