
இவ்வாறு உயிரிழந்த நபர் அம்பலாந்தோட்டை மாமடல பெமினியன்வில பிரதேசத்தில் வசிக்கிம் 26 வயதுடைய கசுன் எரந்தெனிய என்பவராவார்.
உயிரிழந்த நபர் திருமணமானவர் எனவும், 03 மாதங்களுக்கு முன்பு மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், உயிரிழந்தவர் மற்றும் நால்வர் நேற்று (14) அம்பலாந்தோட்டை உகடபிடகொட தன் மனைவியின் வீட்டிற்கு சென்று மனைவியின் சகோதரரை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்திவிட்டு வீடு திரும்பும் போது இனம் தெரியாதோரால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.
கொலை சம்பந்தமாக ஹுங்கம பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்திருப்பதுடன், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் உடல் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் வைத்திருப்பதுடன், காயமடைந்த இருவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.