உயிர்ப்பலியில் போய் முடிந்த வாக்குவாதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயிர்ப்பலியில் போய் முடிந்த வாக்குவாதம்!

அம்பலாந்தோட்டை உகபிடகொட பிரதேசத்தில் நேற்று (14) இரவு நடைபெற்ற வாக்குவாதத்தினால் கைகலப்பு ஏற்பட்டதன் விளைவாக ஒருவர் பலியாகியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபர் அம்பலாந்தோட்டை மாமடல பெமினியன்வில பிரதேசத்தில் வசிக்கிம் 26 வயதுடைய கசுன் எரந்தெனிய என்பவராவார்.

உயிரிழந்த நபர் திருமணமானவர் எனவும், 03 மாதங்களுக்கு முன்பு மனைவியிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாகவும், உயிரிழந்தவர் மற்றும் நால்வர் நேற்று (14) அம்பலாந்தோட்டை உகடபிடகொட தன் மனைவியின் வீட்டிற்கு சென்று மனைவியின் சகோதரரை கூரிய ஆயுதத்தினால் காயப்படுத்திவிட்டு வீடு திரும்பும் போது இனம் தெரியாதோரால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியக் கிடைத்தது.

கொலை சம்பந்தமாக ஹுங்கம பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்திருப்பதுடன், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் உடல் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் வைத்திருப்பதுடன், காயமடைந்த இருவர் அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.