திண்ம உணவுகள் மற்றும் அரை-திண்ம உணவுகள் ஆகியவற்றிற்கான வண்ண குறியீடுகளை எதிர்வரும் ஜூன் 01 திகதி முதல் அமுல்படுத்தவிருப்பதாக, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இவ் அறிவிப்பிற்கான வர்த்தமானி அண்மையில் சுகாதார அமைச்சரால் கையொப்பமிடப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் வெளியிடப்படவுள்ளது.
இவ்வண்ண குறியீட்டு திட்டம் ஏப்ரல் 2 ம் தேதி அமுல்படுத்தப்பட இருந்தும் சட்ட வரைவுத் திணைக்களத்தால் தயாரிக்கப்படும் அதற்கான வர்த்தமானி மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தாமதத்தினாலேயே நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இத்திட்டத்திற்கு பிஸ்கட் தயாரிப்பாளர்களாலும், இனிப்பு பண்ட தயாரிப்பு சங்கங்களாலும் முழு ஆதரவு கிடைத்துள்ளது.
முன்னதாக, சுகாதார அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய மென்பானங்களுக்கான ஒரு வண்ண குறியீட்டு முறை அமுல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.