
ரத்கமை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட நவஜனபத பன்வில பிரதேசத்தில் ஹெரோயின் வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார்.
நேற்றிரவு (29) 09:25 மணியளவிலேயே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
ஹெரோயின் 10 கிராம், 50 மில்லி கிராம் அளவி வைத்திருந்த 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் பன்வில, ரத்கமை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
சந்தேக நபர் இன்று (30) காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
ரத்கமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.