YMMA புலமை பரிசில் 2019 ( ஸக்காத் நிதி) - விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

YMMA புலமை பரிசில் 2019 ( ஸக்காத் நிதி) - விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

அகில இலங்கை வை . எம் . எம் . ஏ. பேரவையினால் வருடா வருடம் வழங்கப்பட்டு வரும் க . பொ . த . சாதரணதர பரீட்சையில் சித்தியடைந்து க . பொ . த . உயர்தர வகுப்பில் கல்வி பயிலும் பொருளாதார வசதிகுறைந்த , திறமையுள்ள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் இவ்வருடமும் வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பதாரர் 2017 டிசம்பர் க . பொ . த . ( சா . த ) பரீட்சைக்கு தோற்றி குறைந்த பட்சம் 3A உடன் கணிதம் , இஸ்லாம் பாடங்கள் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.

இத்தகுதியினை உடையவர்கள் உங்கள் பகுதிகளில் இயங்கும் வை . எம் . எம் . ஏ . களில் இருந்தும் அல்லது www.ymma.lk என்ற இணையத்தளம் மூலமாகவும் https://www. facebook.com/YmmaConference என்ற முகப்புத்தகம் ( ஊடாகவும் விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் ( Download ) செய்தும் பெற்றுக்கொள்ளலாம்கு.

குறிப்பு : இப்புலமைப்பரிசில் ஸகாத் நிதியினூடாக வழங்கப்படுகின்றது என்பதை கவனத்தில் கொள்ளவும் . விண்ணப்பப்படிவங்களை ஒழுங்கான முறையில் பூர்த்திசெய்து அதில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களின் போட்டோ பிரதிகளுடன் இலங்கையிலுள்ள அங்கத்துவ வை . எம் . எம் . ஏ களில் உறுதிசெய்யப்பட்டு எதிர்வரும் 31.03.2019 ஆம் திகதிக்கு முன்னர் கீழ்காணும் முகவரிக்கு கிடைக்கக் கூடியதாக தபால் மூலம் அனுப்பிவைக்கவும்.

( அனுப்பும் கடித உறையில் இடது பக்க மூலையில் Y - Scholarship - Application என்று குறிப்பிடவும்)

NATIONAL GENERAL SECRETARY,
ALL CEYLON YMMA CONFERENCE,
NO. 63, SRI VAJIRANGNANA MAWATHA,
COLOMBO 09.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.