முன்னாள் கடற்படைத் தளபதியிடம் 8 மணி நேரம் வரை நீடித்த விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முன்னாள் கடற்படைத் தளபதியிடம் 8 மணி நேரம் வரை நீடித்த விசாரணை!


முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சற்று முன்னர் வெளியேறினார்.

இன்று (11) காலை வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் இவரை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மார்ச் மாதம் 7 ஆம் திகதி உத்தரவிட்டது. பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து அட்மிரல் வசந்த கரன்னாகொட மனுத் தாக்கல் செய்திருந்தார்.

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.