
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சுமார் 8 மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் சற்று முன்னர் வெளியேறினார்.
இன்று (11) காலை வாக்கு மூலம் ஒன்றை வழங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்திருந்தார்.
கடந்த 2009ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்தில் இவரை கைது செய்வதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்க மார்ச் மாதம் 7 ஆம் திகதி உத்தரவிட்டது. பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து அட்மிரல் வசந்த கரன்னாகொட மனுத் தாக்கல் செய்திருந்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (11) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.