
இன்று (23) வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
இதில் பங்கேற்றி உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
'எமது ஆட்சியின் போது 840 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிதியில் உருவாக்கிய ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெறும் நீச்சல் தடாகம் என விமர்சித்த பிரதமர் அதே துறைமுகத்தை 1.2 பில்லியனுக்கு விற்றுள்ளார். எனவே எமது அரசாங்கம் பெற்ற கடனை நாம் திருப்பி செலுத்த வேண்டிய தேவை இல்லை.
எமது நாட்டின் அபிவிருத்திகள் அனைத்துமே துறைமுகங்களை சார்ந்தே உள்ளது. நாம் அதை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை, சிங்கபூர், துபாய் போன்ற நாடுகள் வளர்ச்சியடைய துறைமுகங்களை சரியாக பயன்படுத்திக்கொண்டமையே காரணமாகும்.
அதனை உணர்ந்தே எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை புனரமைத்தார்.' எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

