ஹம்பாந்தோட்டை துறைமுகம் வாங்கிய கடனையும் மிஞ்சியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹம்பாந்தோட்டை துறைமுகம் வாங்கிய கடனையும் மிஞ்சியது!

வாங்கிய கடனை விடவும் அதிக பெறுமதிக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இன்று (23) வரவு செலவு திட்டத்தின் நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.

இதில் பங்கேற்றி உரையாற்றிய எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'எமது ஆட்சியின் போது 840 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிதியில் உருவாக்கிய ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வெறும் நீச்சல் தடாகம் என விமர்சித்த பிரதமர் அதே துறைமுகத்தை 1.2 பில்லியனுக்கு விற்றுள்ளார். எனவே எமது அரசாங்கம் பெற்ற கடனை நாம் திருப்பி செலுத்த வேண்டிய தேவை இல்லை.

எமது நாட்டின் அபிவிருத்திகள் அனைத்துமே துறைமுகங்களை சார்ந்தே உள்ளது. நாம் அதை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை, சிங்கபூர், துபாய் போன்ற நாடுகள் வளர்ச்சியடைய துறைமுகங்களை சரியாக பயன்படுத்திக்கொண்டமையே காரணமாகும்.

அதனை உணர்ந்தே எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை புனரமைத்தார்.' எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.