கொழும்பில் நில விலை அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் நில விலை அதிகரிப்பு - இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியால் தொகுக்கப்பட்ட ஆண்டுக்கு இரு முறை நிகழ்கின்ற “நில விலை குறியீட்டெண்” (LPI) ஒரு வருடத்திற்கு முன்னர் கொழும்பில் உள்ள நில மதிப்பினை விட சராசரியாக 18% அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.

LPI யின் மூன்று துணை குறியீடுகளான, அதாவது குடியிருப்பு, வணிக மற்றும் தொழிற்துறை ஆகியவை இந்த அதிகரிப்புக்கு பங்களித்ததாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டது.

குடியிருப்பு நில மதிப்புக்கள் ஆண்டுக்கு 17.2% மற்றும் வர்த்தக நில மதிப்பு 17.4% இனாலும் தொழில்துறை நில மதிப்பு 19.4% இனாலும் அதிகரித்துள்ளது.

2018 ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் கொழும்பு மாவட்டத்தின் காணி விலை குறியீட்டெண் (LPI) 125.9 இலக்கை அடைந்திருந்தது. 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் LPI (116.3) இனை ஒப்பிடுகையில் 2018 ஆம் ஆண்டு 18% அதிகரிப்பாகும்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.