சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட மூன்று மதுபான இடங்கள் முடக்கப்பட்டன!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட மூன்று மதுபான இடங்கள் முடக்கப்பட்டன!

தணமல்வில பொலிசாரினால் நேற்றிரவு (19) இலிருந்து இன்று (20) அதிகாலை வரையிலான அவசர தேடுதலின் போது பாரிய அளவிலான சட்ட விரோத மூன்று மதுபான தயாரிப்பு நிலையங்கள் சுற்றி வலைக்கப்பட்டது.

இன்று (20) போயா தினத்தில் மற்றும் வரும் நாட்களில் விற்பனை செய்வதற்காகவே இந்த இடங்களில் மதுபானங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக தகவல் அறியக் கிடைத்தது.

இந்த சட்டவிரோத செயலானது நீண்ட நாட்களாக மேற்கொண்டு வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த இடத்திலிருந்த சட்ட விரோத மதுபானம் மற்றும் தயாரிப்புக்கு தேவையான உபகரணங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் குடாஓயா, தெபரஆர மற்றும் பலகருவை ஆகிய பிரதேசங்களிலிருக்கும் 25, 28, மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் தனமல்வில பொலிசார் மேற்கொண்டு விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.