
இன்று (20) போயா தினத்தில் மற்றும் வரும் நாட்களில் விற்பனை செய்வதற்காகவே இந்த இடங்களில் மதுபானங்கள் உற்பத்தி செய்யப்பட்டதாக தகவல் அறியக் கிடைத்தது.
இந்த சட்டவிரோத செயலானது நீண்ட நாட்களாக மேற்கொண்டு வருவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த இடத்திலிருந்த சட்ட விரோத மதுபானம் மற்றும் தயாரிப்புக்கு தேவையான உபகரணங்களுடன் மூன்று சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் குடாஓயா, தெபரஆர மற்றும் பலகருவை ஆகிய பிரதேசங்களிலிருக்கும் 25, 28, மற்றும் 32 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளதாகவும் தனமல்வில பொலிசார் மேற்கொண்டு விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.