நியுசிலாந்து தீவிரவாத தாக்குதலுக்கு ஆதரவளித்தவரை துபாய் அரசு நாடு கடத்தியது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நியுசிலாந்து தீவிரவாத தாக்குதலுக்கு ஆதரவளித்தவரை துபாய் அரசு நாடு கடத்தியது!!

கடந்த வெள்ளிக்கிழமையன்று நியூசிலாந்தில் கிரைஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு இஸ்லாமிய பள்ளிவாயல்களினுள் புகுந்து அங்கு வழிபாட்டில் இருந்தவர்கள் மீது இளைஞர் ஒருவர் தீவிரவாத துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.

இந்த தாக்குதலில் 5 இந்தியர்கள் உள்ளிட்ட 50 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட Brenton Tarrant என்ற 28 வயது அவுஸ்திரேலிய இளைஞனை நியுசிலாந்து பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் இந்த தாக்குதலுக்கு கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் Transguard என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நியூசிலாந்து தாக்குதலை ஆதரிக்கும் விதமாக கருத்து பதிவிட்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஐக்கிய அரபு அரசு கருத்து பதிவிட்ட அந்த நபரை பணிநீக்கம் செய்துள்ளதுடன் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றியது. கருத்து பதிவிட்ட நபரின் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.