
இந்த தாக்குதலில் 5 இந்தியர்கள் உள்ளிட்ட 50 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட Brenton Tarrant என்ற 28 வயது அவுஸ்திரேலிய இளைஞனை நியுசிலாந்து பொலிசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் இந்த தாக்குதலுக்கு கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் Transguard என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நியூசிலாந்து தாக்குதலை ஆதரிக்கும் விதமாக கருத்து பதிவிட்டிருந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த ஐக்கிய அரபு அரசு கருத்து பதிவிட்ட அந்த நபரை பணிநீக்கம் செய்துள்ளதுடன் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற்றியது. கருத்து பதிவிட்ட நபரின் பெயர், எந்த நாட்டைச் சேர்ந்தவர் போன்ற விவரங்களை வெளியிட மறுத்துவிட்டது.