புகையிரதத்தில் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுனரொருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புகையிரதத்தில் மோதி மோட்டார் சைக்கிள் ஓட்டுனரொருவர் பலி!


இன்று (20) அதிகாலை ரத்கமை பொலிஸ் பிரதேச விஜேரத்ன மாவத்தை நோக்கி திரும்பும் முற்சந்தியில் இருக்கும் புகையிரத கடவையில் கொழும்பிலிருந்து காலி நோக்கி சென்று கொண்டிருந்த புகைவண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி மோட்டார் சைம்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.

எரிபொருள் விநியோகம் செய்யப்பயன்பட்ட புகையிரதமே இவ்வாறு மோட்டார் சைக்கிளுடன் மோதி சைக்கிள் ஒட்டுனர் தீவிர சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலையுக் அனுமதிக்க செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் 63 வயதுடைய பல்லிபிட்டிய, ரத்கமை பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் அறியக் கிடைத்தது.

சடலம் கராபிட்டிய வைத்தியசாலை பிணவரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.