
இன்று (20) அதிகாலை ரத்கமை பொலிஸ் பிரதேச விஜேரத்ன மாவத்தை நோக்கி திரும்பும் முற்சந்தியில் இருக்கும் புகையிரத கடவையில் கொழும்பிலிருந்து காலி நோக்கி சென்று கொண்டிருந்த புகைவண்டியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி மோட்டார் சைம்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் செய்யப்பயன்பட்ட புகையிரதமே இவ்வாறு மோட்டார் சைக்கிளுடன் மோதி சைக்கிள் ஒட்டுனர் தீவிர சிகிச்சைக்காக கராபிட்டிய வைத்தியசாலையுக் அனுமதிக்க செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 63 வயதுடைய பல்லிபிட்டிய, ரத்கமை பிரதேசத்தை சேர்ந்தவர் என தகவல் அறியக் கிடைத்தது.
சடலம் கராபிட்டிய வைத்தியசாலை பிணவரையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.