எந்தவொரு தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ வில்பத்துவிலிருந்து இடங்கள் வழங்கியில்லை-ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எந்தவொரு தனி நபருக்கோ, நிறுவனத்திற்கோ வில்பத்துவிலிருந்து இடங்கள் வழங்கியில்லை-ஜனாதிபதி

கடந்த 4 வருடங்களாக எந்த தனிப்பட்ட நபருக்கோ, நிறுவனத்திற்கோ வில்பத்து பூமியிலிருந்து இடங்கள் வழங்கப்படவில்லை என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் தெரிவித்தார்கள்.

தேரவாத திரிபீடகத்தினை உலக மரபுரிமையாக்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே இன்று (23) ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் தெரிவித்தார்கள்

வரலாற்று சிறப்புமிக்க ஶ்ரீ தளதா மாளிகை மகா நாயக்க தேரரின் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்தது.

திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்கும் திட்டம் தேரவாத பெளத்த நாடுகளின் பங்காளிப்புடன் இலங்கை, யுனெஸ்கோ அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கமைய கடந்த 16 முதல் 23 வரையான காலப்பகுதியினை “த்ரிபிட்டகாபிசந்தனா” (“ත්‍රිපිටකාභිවන්දනා“) என வலியுறுத்தப்பட்டு பல சமய நிகழ்வுகள் நடைபெற்றன.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.