
தேரவாத திரிபீடகத்தினை உலக மரபுரிமையாக்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றும் போதே இன்று (23) ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன அவர்கள் தெரிவித்தார்கள்
வரலாற்று சிறப்புமிக்க ஶ்ரீ தளதா மாளிகை மகா நாயக்க தேரரின் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்தது.
திரிபீடகத்தை உலக மரபுரிமையாக்கும் திட்டம் தேரவாத பெளத்த நாடுகளின் பங்காளிப்புடன் இலங்கை, யுனெஸ்கோ அமைப்பிற்கு உத்தியோகபூர்வமாக முன்வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கமைய கடந்த 16 முதல் 23 வரையான காலப்பகுதியினை “த்ரிபிட்டகாபிசந்தனா” (“ත්රිපිටකාභිවන්දනා“) என வலியுறுத்தப்பட்டு பல சமய நிகழ்வுகள் நடைபெற்றன.