அதிகாரிகளின் கவனக்குறைவால் நாடு மாறிய இரு சடலங்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிகாரிகளின் கவனக்குறைவால் நாடு மாறிய இரு சடலங்கள்!

இலங்கை பெண்ணின் சடலத்திற்கு பதிலாக, இந்தியாவைச் சேர்ந்த ஆண் ஒருவரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் ஒன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்துள்ளது.

சவூதி இராஜ்ஜியத்தில் பணி புரிந்த கண்டி - மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதான பெண் ஒருவரின் சடலத்திற்கு பதிலாக, இந்திய ஆண் ஒருவரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை விமான சேவை நிறுவன அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக, இந்த இரண்டு சடலங்களும் மாறுப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு மாற்றி அனுப்பப்பட்ட இந்தியரின் சடலம் கல்ஃப் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சடலத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத் தந்த பெண்ணின் உறவிகளிடம் இந்த விடயம் குறித்து விமான நிலைய சட்ட வைத்திய அதிகாரி தெளிவூட்டியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சடலங்களை உரிய இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் துவங்கியிள்ளதாக அவர் தெரிவித்தார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.