
சவூதி இராஜ்ஜியத்தில் பணி புரிந்த கண்டி - மாவனெல்ல பகுதியைச் சேர்ந்த 53 வயதான பெண் ஒருவரின் சடலத்திற்கு பதிலாக, இந்திய ஆண் ஒருவரின் சடலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை விமான சேவை நிறுவன அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக, இந்த இரண்டு சடலங்களும் மாறுப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு மாற்றி அனுப்பப்பட்ட இந்தியரின் சடலம் கல்ஃப் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
சடலத்தை பெற்றுக்கொள்வதற்காக வருகைத் தந்த பெண்ணின் உறவிகளிடம் இந்த விடயம் குறித்து விமான நிலைய சட்ட வைத்திய அதிகாரி தெளிவூட்டியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் சடலங்களை உரிய இடங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் துவங்கியிள்ளதாக அவர் தெரிவித்தார்.