இன்னும் 10 நாட்களுக்கு மின் வெட்டு தொடரும்- மின்சக்தி அமைச்சர் ரவி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்னும் 10 நாட்களுக்கு மின் வெட்டு தொடரும்- மின்சக்தி அமைச்சர் ரவி

நாட்டின் பல பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு தொடரும் என மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தியை விடவும் மின்சாரத்துக்கான கேள்வி அதிகமாக காணப்படுகின்றது. இதனால், இன்னும் 10 நாட்களுக்கு மின் வெட்டு நடைமுறையில் இருக்கும்.
இந்த நிலைமையை சீரமைப்பதற்கு பொது மக்களும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டுகோள் விடுகின்றோம். 
பயன்பாட்டில் உள்ள குளிரூட்டிகளில் ஒன்றை தற்காலிகமாக செயற்படுத்தாமல் நிறுத்தி வைக்குமாறும், பயன்பாட்டில் உள்ள மின் விளக்குகள் இரண்டை அணைத்து வைக்குமாறும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இவ்வாறு செய்வது தேசிய ரீதியில் மின் சாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சீர் செய்ய பெரும் உதவியாக அமையும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.