நாட்டின் பல பிரதேசங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மின் வெட்டு இன்னும் 10 நாட்களுக்கு தொடரும் என மின் சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தியை விடவும் மின்சாரத்துக்கான கேள்வி அதிகமாக காணப்படுகின்றது. இதனால், இன்னும் 10 நாட்களுக்கு மின் வெட்டு நடைமுறையில் இருக்கும்.
இந்த நிலைமையை சீரமைப்பதற்கு பொது மக்களும் தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு வேண்டுகோள் விடுகின்றோம்.
பயன்பாட்டில் உள்ள குளிரூட்டிகளில் ஒன்றை தற்காலிகமாக செயற்படுத்தாமல் நிறுத்தி வைக்குமாறும், பயன்பாட்டில் உள்ள மின் விளக்குகள் இரண்டை அணைத்து வைக்குமாறும் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுகின்றேன் எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.
இவ்வாறு செய்வது தேசிய ரீதியில் மின் சாரத்துக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சீர் செய்ய பெரும் உதவியாக அமையும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.