கார்பன் வரியினை எதிர்த்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை பஸ் ஓட்டுனர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கார்பன் வரியினை எதிர்த்து, எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை பஸ் ஓட்டுனர்கள்!


பாடசாலை சேவை வாகனங்களுக்கு விதித்துள்ள கார்பன் வரிக்கு எதிர்ப்பை தெரிவித்து அம்பலாங்கொடை நகரில் இன்று (26) பாடசாலை சேவை பஸ் வண்டி பேரணி ஒன்று நடைபெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற இந்த எதிர்ப்பு காரணமாக அம்பலாங்கொடை பிரதேச சகல பாடசாலை பஸ் வண்டிகள் கலந்துகொண்டதோடு, அந்த பஸ் வண்டிகளில் கறுப்புக் கொடி உயர்த்தி தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள். 

மேற்படி எதிர்ப்பு அகில இலங்கை மாகணங்களுக்கிடையேயான பாடசாலை மாணவ போக்குவரத்து சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த எதிர்ப்பு காரணத்தால் இன்று காலை அம்பலாங்கொடை நகரில் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தகவல் அறியக் கிடைத்தது.




Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.