பதுளை விபத்தில் காவற்படை அதிகாரி ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பதுளை விபத்தில் காவற்படை அதிகாரி ஒருவர் பலி!

பதுளை, மஹியங்கணை வீதியில் கல்தென பிர்தேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காவற்படை அதிகாரி ஒருவர் பலியாகியுள்ளார்.

நேற்று (25) இரவு 07:00 மணி அளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த 34 வயதுடைய காவற்படை அதிகாரி ஆர். எம். அனுர பண்டார எனும் கந்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

மேற்படி விபத்தில் இறந்த அதிகாரி மோட்டார் சைக்கிளில் தன் இல்லத்தினை நோக்கி பிரயாணம் செய்து கொண்டிருக்கையில் பூம் ட்ரக் ஒன்றுடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பந்தப்பட்ட பூம் ட்ரக் சாரதி பதுளை பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு, மேற்கொண்டு விசாரணைகள் நடாத்தி வருகின்றனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.