இலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழ் அழியாது - நடிகர் விவேக்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழ் அழியாது - நடிகர் விவேக்


சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் "உலகின் கடைசி இலங்கைத் தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது" என கூறியுள்ளார்.

மட்டக்களப்பு இராமகிருஷ்ணா மிஷன் ஏற்பாட்டில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.