
சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரையின் 125 ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் "உலகின் கடைசி இலங்கைத் தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது" என கூறியுள்ளார்.
மட்டக்களப்பு இராமகிருஷ்ணா மிஷன் ஏற்பாட்டில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் உதயகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.