போலிசார் செய்த காரியம் - நன்றி பாராட்டும் வவுனியா மக்கள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

போலிசார் செய்த காரியம் - நன்றி பாராட்டும் வவுனியா மக்கள்

மீன் வியாபாரி தொலைத்த 35ஆயிரம் ரூபா பணம், மற்றும் ஆவணங்களைக் கண்டெடுத்து அப்படியே மீன் வியாபாரியிடம் வவுனியாப் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்ங்யில் சில பொலிஸார் மீது இலஞ்சக் குற்றச்சாட்டுகள் சுமத்தபப்பட்டு பொலிஸ் திளைக்களத்தையே தூற்றுகின்ற இந்தச் சூழலில் வவுனியாவில் இடம்பெற்ற சம்பவம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் விடயமாகவும் இந்த சம்பவம் மாறியுள்ளது. சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. புத்தளத்தில் இருந்து முல்லைத்தீவுக்குச் சென்று மீன் வியாபாரத்தில் ஈடுபடும் ஒருவர் பணப்பையுடன் 35 ஆயிரம் ரூபா பணம் உள்ளிட்ட வாகன ஆவணங்களையும் தொலைத்துள்ளார்

நேற்று முன்தினம் இரவு வவுனியா மணிக்கூட்டுக்கோபுரத்துக்கு அருகில் பணப்பை தவறியுள்ளது. வவுனியா புதிய பேருந்து நிலையப்பகுதியிலுள்ள போக்குவரத்துப் பொலிஸார் தமது சோதனை நடவடிக்கையின்போது வியாபாரியை வழிமறித்துள்ளனர்.

இதன்போதே பணப்பை தவறியுள்ளது தெரியவந்துள்ளது. பொலிஸாரும் இணைந்து பணப்பையைத்தேடியலைந்தபோதிலும், பணப்பை, ஏனைய ஆவணங்கள் எவையும் கிடைக்கவில்லை. பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைய வியாபாரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுவிட்டுச் சென்றுள்ளார்.

கடமை முடிந்து வந்த அந்தப் போக்குவரத்துப் பொலிஸார் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு முன்னால் பணப்பையை கண்டெடுத்தனர்.பணம், ஆவணங்கள் இருப்பதை அவதானித்தனர். நேற்றுக் காலை வியாபாரிக்குத் தகவல் வழங்கினர். அவர் தவறவிட்ட 35ஆயிரத்து 640 ரூபா பணம் உள்ளிட்ட வாகனத்தின் ஆவண்ங்கள் அனைத்தும் வியாபரியிடம் ஒப்படைக்கப்பட்டது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.